search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி ஆதித்யநாத்"

    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இப்படத்திற்கு வரி விலக்கு அறிவிப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


    தி கேரளா ஸ்டோரி

    தி கேரளா ஸ்டோரி

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.



    மத்தியப் பிரதேச அரசு கடந்த 6-ம் தேதி இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார். 

    • உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
    • விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    சென்னை:

    உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    இவரது ஆட்சியில் கடந்த 6 வருடங்களாக உ.பி.யில் ரவுடிகளை ஒழிப்பதற்கு என்கவுண்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி இதுவரை 183 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    சமீபத்தில் பிரபல தாதா ஆதித்யா அகமது சகோதரர் அஷ்ரப் அகமது என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசின் அவசரகால நம்பரான 112 என்ற எண்ணில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தொடர்பு எண்ணை ஆராய்ந்தபோது மிரட்டல் விடுத்தவர் பெயர் ரீகன் என்பதும் முகப்பில் அல்லா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • 2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்ததாக முதல்வர் தகவல்
    • உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாக பேச்சு

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் ரவுடி அத்திக் அகமது, அவரது சகோதரர் படுகொலை போன்ற சம்பவங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    இந்நிலையில், லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசும்போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-

    இனி உத்தரபிரதேசத்தில் மாபியாக்களும், குற்றவாளிகளும் தொழிலதிபர்களை அச்சுறுத்த முடியாது. ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசம் கலவரங்களுக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்தது. பல மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்கள் அச்சமடைவார்கள். இப்போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    2012 முதல் 2017 வரை மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்தன. ஆனால், 2017-2023 காலகட்டத்தில் ஒரு கலவரம்கூட வெடிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அந்த நிலை ஏற்படவில்லை. உத்தரபிரதேச அரசு சிறப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

    • கடந்த செப்டம்பர் 9-ந் தேதி 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார்.
    • இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரணாசி :

    உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார் யோகி ஆதித்யநாத். அதுமுதல் சராசரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த 6 ஆண்டுகளில் 100-வது முறையாக நேற்று அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் விசுவநாதருக்கு சிறப்பு வழிபாடும் செய்தார். இதன் மூலம் காசி விசுவநாதர் கோவிலில் 100 முறை சாமி தரிசனம் செய்த முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார்.

    யோகி ஆதித்யநாத் மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது காசிக்கு சென்று வருவதுடன், நகரில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ந் தேதி அவர் 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார். அப்போது 88-வது முறையாக விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்திருந்தார். தற்போதும் அவர் 2 நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது.
    • இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    லக்னோ :

    உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்களின் அதிபர்கள் கலந்து கொண்டு உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர்.

    இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் இந்த மாநாட்டில் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்து பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரூ.33.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டு உள்ளன. இது மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவும்.

    இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் முதலீட்டுக்கு பாதுகாப்பான இடமாக மாநிலம் உருவாகி உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் முன்பெல்லாம் தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் மட்டுமே முதலீடுகள் குவிந்தன. ஆனால் இந்த மாநாட்டின் மூலம் மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீட்டு திட்டங்கள் கிடைத்து உள்ளன.

    இந்த முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில மந்திரிகளும், அதிகாரிகளும் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவார்கள். 'சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம்' என்ற பிரதமர் மோடியின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் மாநில அரசு பணியாற்றி வருகிறது.

    தொழில்முனைவோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலை முதல் களத்தில் தங்கள் முதலீட்டை வழங்குவது வரை அவர்களுக்கு உதவுவதற்காக 'ஊக்குவிப்பு கண்காணிப்பு அமைப்பு' போன்ற வெளிப்படையான ஒற்றைச் சாளர அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இத்தகைய சிறந்த சட்டம்-ஒழுங்கு நிலவரம், முதலீட்டாளர்களை இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கிறது. புதிய இந்தியாவின் ஒரு வளர்ந்த மாநிலமாக உத்தரபிரதேசத்தை மாற்ற மாநில அரசு உறுதிபூண்டுள்ளது

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது.
    • உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி.

    நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தின் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள்.

    இந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இருந்தனர். இவர்களில் 4 பேர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

    பகவான் ஸ்ரீராமரின் புனித பாதங்களில் மறைந்த ஆத்மாக்களுக்கு இடம் கொடுக்கட்டும். இறந்தவர்களின் உடல்களை உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு சுற்றுலாத்துறை வளர்ச்சி 10 மடங்கு அதிகரிக்கும்.
    • இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக தலைநகரமாக காசி உள்ளது.

    லக்னோ:

    இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் 37வது ஆண்டு விழா மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது:

    கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு மேற் கொண்ட முயற்சிகளால் உள்நாட்டு சுற்றுலாவில் உத்தரபிரதேசத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது. உலகின் மிகப் பழமையான நகரமான காசி இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரமாக உள்ளது.

    ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முன்பு வழக்கமாக வாரணாசிக்கு வருடத்திற்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு வாரணாசிக்கு கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

    அயோத்தி நம்பிக்கையின் மையமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வர விரும்புகின்றனர். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் அயோத்தியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    2024 ஆண்டில் இந்த பணிகள் முடிவடையும் போது, இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்கும், அதே போல் உள்நாட்டினராக இருந்தாலும், வெளிநாட்டினராக இருந்தாலும் மக்கள் மதுராவுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
    • தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

    சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினத்தையொட்டி மாநில சுகாதார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் உரையாற்றிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது:

    கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தியதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கொரோனாவிற்கு எதிரான இந்திய தடுப்பூசி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டது. தரமான தடுப்பூசிகளை இந்தியா தயாரித்துள்ளது. அதன் செயல்திறன் உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து சீரமைக்க கொரோனா தொற்று நோயை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டது. 


    2014 ஆம் ஆண்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. விரைவில் நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கும் தருவாயில் உள்ளன. மத்திய அரசின் மருத்துவ சேவைத்திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் தடுப்பூசித் திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்கள் சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா, சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் எம் கே ஷர்மா, உத்தரகாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் மற்றும் சிக்கிம் சுகாதாரத்துறை அமைச்சர் சபன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
    • இந்த கோவில் 2024-ம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ :

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 3 தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கோவில் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்து ராமர் கோவிலை எளிதாக அடையும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1,000 கோடியில் மெகா திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

    நிலம் கையகப்படுத்தல், குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்களின் மறுவாழ்வு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்துக்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இது குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'இந்த திட்டத்தின் மூலம், ராம ஜென்மபூமிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, ராமபிரானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும்' என்று கூறினார்.

    இதில் முக்கியமாக, சுக்ரீவா கோட்டையில் இருந்து ராம ஜென்மபூமி வரையான 566 மீட்டருக்கு பக்தர்களின் வசதிக்காக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ஜென்மபூமி பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதற்காக ரூ.83.33 கோடிக்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    • காவல்துறையில் 22,000 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • காவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    லக்னோ:

    காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 4,453 பேர் காயமடைந்தனர்.

    காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் மறைந்தார்.
    • பிரமாண்ட வீணை சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி :

    புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் மறைந்தார். அவரது புகழை போற்றும் வகையில் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் சாலை சந்திப்பு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. சரயு நதிக்கரையில் உள்ள இந்த சந்திப்பு லதா மங்கேஷ்கர் சவுராகா என்று இனி அழைக்கப்படும்.

    ரூ.7.9 கோடி செலவில் அந்த சந்திப்பை மேம்படுத்திய மாநில அரசு, அங்கு பிரமாண்ட வீணை சிலை ஒன்றையும் வைத்து இருக்கிறது. 12 மீட்டர் உயரம், 40 அடி நீளம் கொண்ட இந்த சிலை 14 டன் எடை கொண்டது ஆகும்.

    லதா மங்கேஷ்கரின் 93-வது பிறந்த தினத்தையொட்டி இந்த சந்திப்பை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டியும் கலந்து கொண்டார்.

    இதுபோன்ற பிரமாண்ட இசைக்கருவி நிறுவப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் இடம் என மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமர் கோவில் கட்டப்படும் ராம ஜென்ம பூமியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்தக் கோவில் உள்ளது.
    • தனது மக்கள் நலப்பணிகளால், கடவுள் நிலையை எட்டியுள்ளார் யோகிஜி

    அயோத்தி :

    தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர், அபிமான நட்சத்திரத்துக்கு தொண்டரோ, ரசிகரோ கோவில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம்தான். அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அந்த ஊர்க்காரரான பிரபாகர் மவுரியா, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியுள்ளார்.

    இங்கு தலைக்குப் பின் ஒளிவட்டம், வில்-அம்புடன் யோகி ஆதித்யநாத்தின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. காவி ஆடையும் அணிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்தக் கோவிலில் காலை, மாலை இருவேளை பூஜையுடன், 'பக்தர்களுக்கு' பிரசாதமும் வினியோகிக்கப்படுகிறது.

    பைசாபாத்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையையொட்டி பாரத்குண்ட் என்ற இடத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வனவாசம் சென்ற ராமருக்கு அவரது சகோதரர் பரதன் இங்குதான் விடை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ராமர் கோவில் கட்டப்படும் ராம ஜென்ம பூமியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. கோவிலை கட்டியுள்ள பிரபாகர் மவுரியா, 'தனது மக்கள் நலப்பணிகளால், கடவுள் நிலையை எட்டியுள்ளார் யோகிஜி. அதனால்தான் அவருக்கு கோவில் கட்டும் எண்ணம் எனக்கு வந்தது. ராமர் கோவில் கட்டும் அவருக்கு நான் கோவில் கட்டியுள்ளேன்' என்கிறார். ராமரை தான் வழிபடுவதைப் போலவே தினமும் யோகி ஆதித்யநாத்தை மந்திரம் சொல்லி வழிபடுவதாக மவுரியா கூறுகிறார்.

    மவுரியாவுக்கு நிரந்தர வேலையோ, நிலமோ இல்லை. அப்படியானால், இந்தக் கோவில் கட்டுவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்...

    'பஜனைகள், பக்திப் பாடல்களை நான் யூடியூப்பில் வெளியிட்டு மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன். அந்தப் பணத்தில்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கிறேன்' என்று விளக்கம் அளிக்கிறார்.

    இதற்கிடையில் 'யோகி ஆதித்யநாத் கோவில்' பற்றி கேள்விப்பட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு பூடகமான டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.

    ×